Thursday, February 4, 2010

மறக்க முடியுமா . . . II


ஐந்தாம் வகுப்பில் கிரிக்கெட் ஆடியதும்
பேட் ஆகப் புத்தகங்கள் பாவித்ததும்
ரேணுகா மிஸ் பந்துகள் பறித்து வைத்ததும்
Dharshanன் கண்ணாடி நொறுங்கிப் போனதும்
மறக்க முடியுமா . . .

ஆறாம் வகுப்பில் கபடி ஆடியதும்
அதற்காய் டேபிள் பெஞ்ச் ஒதுக்கியதும்
சீருடைப் பட்டி தனியே கழன்றதும்
யாரேனும் வந்தால் நிலத்தில் ஒளிந்ததும்
மறக்க முடியுமா . . .

மாதத்துக்கொரு முறை வகுப்பாய்ப் பூசை செய்ததும்
விஜயதசமிக்கு வண்ணப் பட்டாம் பூச்சிகளாய் வந்ததும்
சிவராத்திரி போட்டிக்கு நாடகம், நாட்டியம் பழகியதும்
கந்தசஷ்டிக்கு ஒன்றாய்ப் பாரணைச் சோறு உண்டதும்
மறக்க முடியுமா . . .

2 comments:

  1. Vow.. I missed those early days..

    ReplyDelete
  2. போனால் போகட்டும் ;-) நாங்க சேர்ந்தா பிறகு எத்தனை செய்தனாங்க ;-)

    ReplyDelete